விஜய் டிவி-யில் மிகவும் பிரபலமாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அதென்னவோ சீரியல் ஆரம்பித்த நாள் முதலே இல்லத்தரசிகளின் மத்தியில் சீரியல் பெரும் அளவு வரவேற்பை பெற்றுவருகிறது.
அதிலும், பாக்கியா-வின் ஆளுமை, கோபியின் காமெடி, பழனிச்சாமி-யின் பேச்சு என்று சீரியல் முன்பை விட, இப்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இப்போது பாக்கியா கோபியிடம் இன்னும் ஒரு மாதத்தில், அவருடைய பணத்தை திருப்பி கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
அதற்காக பழனிச்சாமியின் தலைமையில், புதிய ஆர்டர் ஒன்றை எடுத்து பாக்கியலட்சுமி நடத்துகிறார். அந்த காட்சிக்கான சூட்டிங் தான் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. நிறைய சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
இன்னிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் தாடி பாலாஜி, சீரியலில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். அந்த விழாவை தலைமைத் தாங்க வருவார் என்று சொல்லப்படுகிறது. எப்படியோ? அவரை நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் சீரியலில் பார்த்தது, மகிழ்ச்சியையே கொடுத்துள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.