எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று சுவாரசியம் தான் அதிகரித்துள்ளது. ஜனனி எப்படியாவது ஆதிரை திருமணத்தை நடத்த அவ்வளவு முயற்சி செய்து கடைசியில் அவருக்கு கெட்ட பெயர் தான் மிஞ்சியது.
மேலும் ஆதிரை ஜனனியிடம் உன்னால என் வாழ்க்கையே போச்சு. கடைசில என்ன நம்ப வச்சு இப்படி கழுத்த அறுத்துட்டீங்களே என சண்டை போடுகிறார். இந்த பக்கம் குணசேகரன் தான் நினைத்தது நடந்து விட்டது என்ற ஆணவத்தில் வீட்டில் உள்ள பெண்களை திட்டுகிறார். இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் குணசேகரன் ஜனனியிடம் நீ ஆடுன ஆட்டத்திற்கு என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் என்கிறார். உடனே ஜனனி நீங்க நினைச்சது நடந்துருச்சுன்னு ரொம்ப ஆடாதீங்க. உன் கால்ல என்னால விழா முடியாது என்று சொல்கிறார்.இதை கேட்ட கதிர் ஆத்திரத்தில் ஜனனியை அடிக்க கை ஓங்குகிறார்.
அப்போது ஜனனி சக்தி ஏன் பொண்டாட்டிய அடிக்க நீ யாருடா என கதிரை கன்னத்தில் அறைகிறார். இதை பார்த்த நந்தினி, ரேணுகா சந்தோஷ படுகின்றனர். மேலும் இனி ஜனனியை யார் என்று சொன்னாலும் அவங்கள சும்மா விடமாட்டேன் என எச்சரிக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் குணசேகரன் ஜனனியை பழிவாங்க நினைத்தால் சக்தி நிச்சயம் சும்மா விடமாட்டார் என்று தான் தெரிகிறது.