ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
கிளாமரில் இறங்கி அடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி
எப்போதுமே போட்டோ ஷூட் செய்து அதை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு இந்த போட்டோஸ் உள்ளது என்று கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
மேலும் இவருக்கு விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் கூறி இருப்பது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.