பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ராதிகா பாக்கிய குடும்பத்திற்குள் நுழைந்து பல சண்டைகளை இழுத்து வருகிறார். பாக்கியா எல்லாவற்றையும் சமாளித்து கொண்டே தான் செல்கிறார். மேலும் வீட்டை மீட்பதற்காக பழனிச்சாமி சொன்ன பெரிய ஆர்டரை ஒத்துக்கொள்கிறார்.
இப்படி ஒரு பக்கம் சீரியல் நகர்ந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் செழியன் அப்பாவிற்கு தப்பாமல் நடந்து கொள்கிறார். அதாவது, மாலினியிடம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். மாலினிக்கு செழியனை பிடித்து போக தன்னுடன் இருக்கும்படி வற்புறுத்துகிறார். செழியனை குடிக்கவும் வைக்கிறார்.
குடித்து விட்டு வீட்டிற்கு வரும் செழியனை பாக்கியா கண்டித்து அனுப்புறார். இப்படி இருக்க மேலும் ஒரு ட்விஸ்டாக அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, மாலினி கர்ப்பமாக இருப்பது போல சீரியல் நகரவுள்ளது. ஒருவேளை செழியனை குடிக்க வைத்து அவர் சுயநினைவை இழக்கும் நேரத்தில் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.