சன் டிவி யில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை நல்கர் பிரியங்கா. முதல் சீரியலிலேயே, தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார். அந்த சீரியலின் முடிவுக்கு பின் ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியிருந்தார்.
சீதா ராமன் சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் சீதா கதாப்பாத்திரத்தில் அவர் அப்படியே பொருந்திப் போயிருந்தார். அவருக்கும், அவருடைய ஆருயிர் காதலனுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிறைவடைந்திருந்தது.
அதைத் தொடர்ந்து அவரும் அந்த சீரியலை விட்டு விலகப் போவதாக, தகவல்கள் அடுத்தடுத்து வெளி வந்தது. அதை உறுதி செய்வது போல் அவரும், சில வாரங்களுக்கு முன், அவருடைய கடைசி நாள் சூட்டிங் என்று பதிவிட்டு, அவருடைய முடிவை தெரிவித்திருந்தார்.
அவருக்கு பதில் யார் தான் புதிய சீதா? என்று அடுத்தடுத்து பல கேள்விகள் வந்தது. பல பேர் நடிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மிக மிக அவசரம் படத்தில் ஹீரோயினாக நடிகை ஸ்ரீ பிரியங்கா, அடுத்த சீதா-வாக நடிக்கவுள்ளார். அடுத்த வாரத்தில் இருந்து அவரின் காட்சிகள் ஒளிப்பரப்ப உள்ளது.