தமிழ் சினிமாவில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த சித்து ப்ளஸ் டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. மேலும் அவர் பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சாந்தினி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். அவர் நடன இயக்குநர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சின்னத்திரைக்கு தாவிய அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சாந்தினி தனது கணவருடன் கலந்துள்ளார். அப்போது பேசிய சாந்தினி, எங்களுக்கு திருமணமாகி 6 மாதம் என் கணவர் என்னை தூங்க விடமாட்டார் என சாந்தினி சிரித்துக்கொண்டு சொன்னார்.
உடனே குறுக்கிட்டு பேசிய அவரது கணவர், நான் பேசுவது கொஞ்சம் சத்தமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு லேட்டா தான் வருவேன். அப்போ சாந்தினி தூங்கும் போது கதவுளை வேகமாக திறப்பது, சாத்துவது போன்ற வேலைகளை மூலமாக அவருடைய தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்று சாந்தினியின் கணவர் நந்தா கூறியுள்ளார்.