மகாலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக தனது பயணத்தை துவங்கி பின்னர் நடிகையாக அவதாரமெடுத்து பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களிலும் பல ரோல்களிலும் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவராக வலம் வருபவர் மகாலட்சுமி.
இவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவரை விவாகரத்து செய்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த சில காலங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் இணையத்தில் பேசுபொருளாக இருந்தது.
மேலும் இருவரும் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வந்தனர். ரவீந்தர்- மகாலட்சுமி இருவரும் அவ்வப்போது நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் மகாலட்சுமி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த சீரியல் முடிவு அடைகிறது என்ற தகவல் எனக்கு ரொம்ப சோகமாக இருக்கிறது. எப்படியும் சீரியல் முடிவுக்கு வரும் என்பது தெரியும் இருப்பினும் வருத்தமாக இருக்கிறது .
அன்பே வா சீரியலில் உள்ள வாசுகி என்ற கதாபாத்திரம் என்னுடைய மனதில் பிடித்த ஒரு கேரக்டராக இருக்கிறது என்று மகாலட்சுமி கூறியுள்ளார்.