தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரெஜினா கசாந்த்ரா. 2005 ஆண்டு “கண்ட நாள் முதல்” என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் அவர் நடித்தார், 2010 ஆம் ஆண்டு “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் நடித்தார்.
தொடர்ந்து நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, 1945, கருங்காப்பியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், இதுபற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். சிறுவயதில் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
என் சினிமா வாழ்வில், ஒரே ஒரு முறை தான் அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை நான் சந்தித்து இருக்கிறேன். எனக்கு ஒருவர் அலைபேசியில், அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். ஆனால் அப்போது எனக்கு அது புரியவில்லை.
நான் சம்பள விஷயத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார் என நினைத்தேன். பின்னால்தான் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் என்று தெரியவந்தது. அந்த சமயத்தில் எனக்கு 20 வயது தான் ஆகியிருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.