ரேஷ்மா பசுபுலேட்டி
தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும், செய்தி நிருபராகவும் ஆரம்ப காலகட்டத்தில் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர் தற்போது சின்ன திரையில் தனது அற்புதமான நடிப்பை காட்டி சீரியல்களில் கலக்கி வருகிறார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து மிகப் பிரபலமாக மாறி இருக்கும் இவர் இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று கூறலாம். அந்த அளவு பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களையும், ஆண் ரசிகர்களையும் இவர் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகியுள்ள சீதாராமன் என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இன்ஸ்டாகிராமில் எப்போது இவர் புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றை தனது வாழ்வில் நடந்த மிக மோசமான அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். அமெரிக்காவிலே செட்டில் ஆகி இருந்தேன். முதலில் அவர் நல்லவர் போன்று தான் என்னிடம் நடந்து கொண்டார்.
அதன்பின் பல பெண்களுடன் அவர் உறவு வைத்திருப்பது எனக்கு தெரிய வந்தது. இதை பார்த்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அவரிடம் கேட்டதற்கு என்னை ஓங்கி அடித்துவிட்டார். யாரும் எனக்கு உதவ வரவில்லை நானே தனியாளாக கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் பின்னர் சில மாதம் கழித்து என் மகன் பிறந்தான்.
என் மகன் மிகவும் வீக்கான குழந்தையாக பிறந்து தொடர்ந்து 4…5 மாதங்கள் இன்க்பெட்டிலே இருந்தான். அவனுக்கு தினம்தோறும் நான் பிசியோதெரபி சிகிச்சை செய்ய வேண்டும். அவன் உயிரோடு பிழைப்பான மாட்டானா என்பதை எனக்கு சந்தேகமாக இருந்தது. அதன் பின்னர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டேன்.