தமிழில் பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்து பரிச்சயமானவர்தான் நடிகை காயத்ரி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது நடனத்தால் மக்களிடையே பிரபலமான அவர் பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கி தென்றல், சரவணன் மீனாட்சி, தாமரை, அழகி, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் நடிகை காயத்ரி இறுதியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நடித்து வந்தார். நடிகை காயத்ரி நடன கலைஞர் யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தருண் என்ற 13 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் அடுத்த மகிழ்ச்சி செய்தியாக நடிகை காயத்ரி யுவராஜ் அவரது செல்ல மகளுக்கு “அன்னப்பிரசன்னம்” நடத்தி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
அதாவது தனது மகளுக்கு முதல் முறையாக கடவுளின் ஆசையோடு திட உணவை வழங்குவதை தான் அன்னப்பிரசன்னம். இதனை தமிழில் சோறு ஊட்டும் சடங்கு என்றும் கூறுவார்கள்.