நடிகை ரஞ்சிதா
பாலியல், கடத்தல், கற்பழிப்பு என பல வழக்குகள் கொண்டு போலீஸாரால் தேடப்பட்டவர் நித்யானந்தா சுவாமி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமறைவான அவர் கைலாசா என்ற தீவுக்கு சென்றதாகவும், அதனை தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த நாட்டை ஹிந்துக்களுக்காக உருவாக்கியதாக கூறி அதற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் அவ்வப்போது சொற்பொழிவாற்றி அந்த வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரஞ்சிதா என்ன ஆனார்?
இதை தொடர்ந்து நித்தியானந்தாவின் பக்தியாகவே மாறிவிட்டார் நடிகை ரஞ்சிதா. இப்போது ரஞ்சிதா என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது
அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா என்ற தன்னுடைய பெயரை மா ஆனந்தமாயி என்று பெயரை மாற்றிக்கொண்ட ரஞ்சிதா…. தற்போது மா ஆனந்தமாயி தேவி என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும், கைலாஷா நாட்டின் பிரதமராகவும் செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.