ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
ட்ரெஸ்ஸா இது..?
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நிருபரின் கேள்விக்கு ரச்சிதா கொடுத்த பதிலைப் பார்த்து அனைவரும் அவரை பாராட்டி இருக்கிறார்கள், பிக் பாஸ் என்பது போட்டியாளர்களுக்கு ஒரு பிளாட்பார்மாக இருக்குமே ஒழிய ஒவ்வொருவரது தனி திறமை தான் அவர்கள் வாழ்க்கையில் அவர்களை முன்னேற வழி செய்கிறது. அதற்கான முயற்சிகளும் அவர்கள் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
அத்தோடு அந்த நிருபர் இந்த உடம்பை வைத்துக்கொண்டு போடுற ட்ரெஸ்ஸா இது நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் பப்பிளியாக இருப்பதால் உங்களுக்கு போலீஸ் கேரக்டர் பொருந்துமா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மெய் நிகரே என்ற படத்தில் நடித்து வந்திருக்கும் இவர் தான் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். எக்ஸ்ட்ரீம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரச்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படமானது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி வருகிறது.
எனவே தான் படு அழகாக இருக்கக்கூடிய ரச்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரி வேடத்திற்கு சரியான பொருத்தமாக இருப்பாரா? என்ற பாணியில் கேள்வி எழுப்பிய நிருபருக்கு தகுந்தபடி பதிலளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.