கீர்த்தி சுரேஷ்
அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி 1992 இல் பிறந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது வயது 25. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் குமார்தான் இவரது தந்தை.
இவரது தாய் பெயர் மேனகா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவரது தாய் மேனகா. மிகவும் பிரபலமான இவர் இதுவரை பலநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
முதன்முதலில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திரைத்துறையில் பாராட்டைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
பொங்கி எழுந்த கீர்த்தி சுரேஷ்
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷிடம் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்களுடைய மகாநதி திரைப்படத்தில் உங்களுடைய நடிப்பு எப்படி இருந்தது என்று நடிகர் விஜய் மேடையிலேயே கூறியிருந்தார்.
ஒரு மிகப்பெரிய நடிகர் உங்களைப் பற்றி கூறிய அந்த வார்த்தைகளை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், இதனை நான் நடிகர் விஜய்யிடம் இருந்து சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதை அவர் பேசித்தான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
பேசாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், அந்த படத்தை பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பை பாராட்டியது என்னால் நம்பவே முடியவில்லை. இப்போது கூட நடிகர் விஜய் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டிய அந்த சம்பவத்தை நாள் மறக்க முடியவில்லை என மகிழ்ச்சி பொங்க பதிவு செய்திருக்கிறார்.