தமிழகத்தில் தற்போது மாணவிகளின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியிருந்தது இந்நிலையில் தேர்வில் நடிகை தேவயாணியின் மகள் பெற்ற மதிப்பெண்களும் வெளியாகியுள்ளது.
தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் தேவயானி.சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். காலம் செல்ல படங்களில் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். முதன்முதலாக ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
அந்த சீரியல் பல சாதனைகளையும் செய்தது. பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு புது புது அர்த்தங்கள் என்ற சீரியல் மீண்டும் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.
இந்நிலையில் தற்போது நேற்று முன்தினம் பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி இருந்தது. இதில் நடிகை தேவயாணியின் மகளும் தேர்வெழுதி மதிப்பெண்ணுக்காக காத்திருந்தார்.
இதன்போது அவரின் மதிப்பெண்ணானது 600இற்கு 492 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். இவர் தேர்ச்சியடைந்ததையிட்டு தேவயாணியின் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் நந்தினி என்ற மாணவி 600 புள்ளிகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.