தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான படம் பகவதி. இப்படத்தின் விஜய்யின் தம்பியாக குணா கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார் நடிகர் ஜெய்.
இப்படத்தினை தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமணன், கோவா போன்ற படங்கள் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தது.
அடஹ்ன்பின் ராஜா ராணி படத்தில் க்யூட்டான ரோலில் நடித்து இளம்பெண்களை கவர்ந்து வந்தார். அதன்பின் எங்கேயும் எப்போதும், பலூன் படங்களில் நடிகை அஞ்சலியுடன் ஜோடி போட்டு நடித்தார். இப்படத்தின் மூலம் இருவரும் காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதன்பின் ஜெய் நடிகை வாணி போஜனுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார். இந்நிலையில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஜெய்யின் மதுபழக்கம் பற்றிய உண்மையை பகிர்ந்துள்ளார்.
ஜெய்யுடன் அஞ்சலி காதலை முறிக்க காரணம் மதுபழக்கம் தான். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் குடிக்காத கார் விபத்து என்று அறிவுரை கூறியும் கேட்காததால் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். ஜெய்யும் அஞ்சலியும் திருவான்மியூர் பீச்சில் ரெண்டு பிளாட் வாங்கினார்கள்.
அஞ்சலி அவர் பிளாட்டை விற்றுவிட்டார் என்றும் ஜெய் பிளாட்டில் அவரது அப்பாவும் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். காதல் முறிவிற்கு பின் அஞ்சலி படங்களி கவனம் செலுத்தி வருகிறார்.