நடிகர் மாரிமுத்து
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.
பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரண், மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்ஜே சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.
சிங்கமுத்து கண்ணீர்
இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். மாரிமுத்துவிடம் அடிக்கடி டென்ஷன் ஆகாத டென்ஷன் ஆகாதன்னு ஒரு ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அதிகப்படியான டென்ஷன் ஆகக்கூடிய ஒரு ஆள் நடிகர் மாரிமுத்து. சில நிமிடங்களுக்கு எதற்கு நான் அப்படி கோபப்பட்டேன் என்று அவரே யோசித்துக்கொண்டதும் உண்டு.
ஆனாலும், சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி கோவப்படுவது டென்ஷன் ஆவது என இருப்பார். இது போல் டென்ஷனாகாத என ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன்.
ஆனால் இப்போது திடீரென மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு இரத்த அழுத்தம் அதிமாக இருந்தது. என்ன செய்வது என தெரியவில்லை.
எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் மரணத்தின் பிடியில் சிக்கி தான் ஆக வேண்டும். அதை தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை.