நடிகர் மாரிமுத்து
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.
பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரண், மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்ஜே சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.
சினிமா இயக்குனரும் சீரியல் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். அவருடைய கடைசி பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய குடும்பத்தினர் கொடுத்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார் மாரிமுத்து. என்னுடைய குடும்பத்தை நல்ல முறையில் வைத்திருக்கிறேன் என்ற ஒரு நிறைவு எனக்கு ஏற்பட்டது என பேசி இருக்கிறார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீரை அடக்க முடியவில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.