பிரபல விஜய் தொலைக்காட்சி மூலம் பல பிரபலங்கள் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில், நம்ம விஜய் டிவியில், சிவகார்த்திகேயனுக்கு அடுத்து பிரபலமானவர் மகபா.. இவர் ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜேவாக பணியாற்றினார்…
அப்போது தான், மிர்ச்சி செந்தில் அவருக்கும், இவருக்கும் ஒரு நட்பு உருவானது. அதுமட்டுமில்லை, அவருக்கு ம.க.பா என்ற பெயரை வைத்தது கூட அவருதான்.. என பல மேடைகளில் மகபா வே சொல்லியிருக்கிறார்… சிவகார்த்திகேயன் விஜய் டிவி-யை விட்டு சென்ற பிறகு அவர் தொகுத்து வந்த அது இது எது நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்…
அதன் பின் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியாங்கா தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அடைந்தது… பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாகாபா ஆனந்த். இவர் மீடியாவிற்கு வருவதற்கு முன் கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்..
அப்போது அவர் பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் உடன் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ். அவர்களுக்குள் இருந்த நட்பு நாளைடைவில் காதலாக மாறி அவரை திருமணமும் செய்துகொண்டார். இது குறித்து அவர் கூறும் போது.. நான் மீடியாவிற்குள் வருவதற்கு முக்கிய காரணம் அவர் மனைவி தான் என்றும்..
நான் வேலை இல்லாத காலத்திலும் என்னுடன் பக்கபலமாக நின்று, உன்னால கண்டிப்பா முடியும் என சொல்லி, என்னை மட்டுமில்லாமல், என் குடும்பத்தையும் அவர் பார்த்துக் கொண்டார்… அதற்கும் மேல் அவருக்கு தமிழே தெரியாது என்றும் பல விருது நிகழ்சிகளில் கூறியிருக்கிறார்…
சமீபத்தில் தான் மாகாபா ஆனந்த் தனது 15வது வருட திருமண நாளை குடும்பநண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில் அவர் தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..