ஊர்வசி
தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபாலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஊர்வசி. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகநடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதையும் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார்.
அதன்பின் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துள்ளார். தற்போது கூட ஊர்வசி நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஹீரோயின் லீட் படங்களிலும் நடித்து வருகின்றார். வயதானாலும் கூட ஊர்வசியின் நடிப்பு திறமைக்கு இந்த கால இளைஞர்கள் கூட ரசிகர்களாகி இருக்கின்றனர்.
நடிகை ஊர்வசிக்கு கடந்த 2000 ஆண்டில் திருமணம் நடந்தது. நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை மணந்து கொண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் குறித்து பேசிய ஊர்வசி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஊர்வசி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என் திருமணம் விவாகரத்தில் முடிய குடிப்பழக்கம் தான் காரணம். எனக்கு சரக்கு ஊற்றித்தந்தவரே முதல் கணவர் மனோஜ் தான். கடைசியில் நான் குடிக்கு அடிமையாகிவிட்டேன்.
அந்த சமயத்தில் நான் மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போது என் குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். நான் அவரை திருமணம் செய்யும் போது என்னுடைய வயது 40. இதனால் பலரும் என்னை விமர்சித்தார்கள். ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ஊர்வசி கூறியுள்ளார்.