நடிகை தீபா வெங்கட்
சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா, சினேகா உள்ளிட்ட தமிழின் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் தீபா வெங்கட். இவர் சீரியல் நடிகையும் ஆவார். இவரது குரல் வளமை மற்றும் டப்பிங் திறமைக்காக தனி ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. 1994 ஆம் ஆண்டு பாசமலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக முதன்முறையாக ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் பேசினார். அந்த படம் துவங்கி தற்போது வெளியான அவருடைய சமீபத்திய படங்கள் வரை தீபா வெங்கட் தான் பேசி வருகிறார். 1996 வருடம் சன் டிவியில் ஒளிபரப்பான “இப்படிக்கு தென்றல்” என்ற சீரியல் தீபாவுக்கு முதல் தொலைக்காட்சி தொடர் ஆகும். சித்தி சீரியல், தீபா வெங்கட்டுக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. 90ஸ்கள் மற்றும் 2000மாவது ஆண்டு தொடக்கங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் தீபா வெங்கட் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
48 வயசுலயும் இப்படியா..?
இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் கடினமான எடையை தூக்கும் இவருடைய வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 48 வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.