நடிகர் மாரிமுத்து
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.
பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரண், மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்ஜே சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.
எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.
மாரிமுத்து-வின் மகன் வேதனை..
அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய தந்தைக்கு உயிர் என்பது சினிமா தான். எப்போதும் சினிமா காட்சிகள் திரைக்கதை இது போன்ற விஷயங்களில் தான் கவனமாக இருப்பார்.
அவரை விடவும் அவருக்கு மிகப்பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அது சினிமா தான். அது சீரியலாக இருக்கட்டும் திரைப்படமாக இருக்கட்டும் திரையில் தோன்றுவது நடிப்பதுதான் அவருடைய மூச்சாக இருந்தது.
சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சி எடுத்து இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்குண்டான பலனை அவர் பெற்றுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது ஒரு வகையில் சந்தோஷமான விஷயம் தான் என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.