நடிகை ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானார். இவர் இந்த படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே திரைப்படங்களில் நிறைய பின்னணி இசை பாடகர் ஆக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
பிறகு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதன் மூலமாக நிறைய படங்கள் தற்சமயம் நடித்து வருகிறார். இதில் நடிகர் கமலுடன் விஸ்வரூபம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது இதில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி , மாளிகை மற்றும் சொல்லக் கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
என் வாழ்க்கையை சீரழத்தது இந்த நடிகர் தான்
ஆண்ட்ரியா அவர்கள் திருமணமான ஒரு அரசியல்வாதியுடன் உறவு வைத்துள்ளதாகவும் அவரால் மனதளவிலும் உடலளவிலும் மிகுந்து காயத்தை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அதுவும் வெளிப்படையாக இதனாலே நான் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் எடுத்ததாகவும் கூறியுள்ளார். இதையெல்லாம் குறித்து அவர் எழுதிய புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆண்ட்ரியா அவர்கள் எழுதி வெளியிட்ட ப்ரோக்கன் வின்ஸ் புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டுள்ளதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த அரசியல்வாதிக்கு சற்று பயமாகத்தான் இருக்கு வேண்டும் என்று கூறியுள்ளார்.