ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் ரீமேக்கில் வெளியானது. இப்படத்தில் ம்ம் சொல்றியா மாமா ம்கும் சொல்றியா மாமா பாடலை பாடியிருக்கிறார்.
இப்பாடல் மிகப்பெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரண்மனை படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது 36 வயதாகும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
லீக்கான ஆண்ட்ரியா வீடியோ
தற்போது “அனல் மேல் பனித்துளி” என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கின்றார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பல தகவல்கள் நடிகை ஆண்ட்ரியா கூறியிருக்கின்றார், “அனல் மேல் பனித்துளி” படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது மிகவும் அரு வெறுப்பாகவும், கூச்சமாகவும் இருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்தது புதுமையாக இருந்தது இதில் நடித்த அருவருக்கத்தக்க ஒரு சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் கூறினார்.