யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். நாகராஜன் இயக்கத்தில் சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, விசு, பிரகாஷ் ராஜ் உள்பட பல திரைப்பட வட்டாரங்கள் இணைந்து 1997ம் ஆண்டில் வெளிவந்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா இசையமைபாராளராக திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன் பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், ரிஷி, தீனா, நந்தா, காதல் கொண்டேன், பேரழகன், ராம், 7 ஜி ரெயின்போ காலனி, சண்டக்கோழி, வல்லவன், திமிரு, பருத்திவீரன், தாமிரபரணி, தீபாவளி, வேல், யாரடி நீ மோகினி, சிலம்பாட்டம் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இவர் 2007ல் வெளிவந்த ‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றிருப்பது குறிப்பிட தக்கது. பின்னர் 2005 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
இஸ்லாம் பெண்ணை திருமணம்
பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். முதல் திருமணம் சரி வர அமையாததால் விவாகரத்துக்கு பின்னர் 4 ஆண்டுகள் சிங்கிளாக வாழ்ந்து வந்தார் யுவன். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் படு கோலாகாலமாக நடைபெற்றது. ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் யுவனுக்கு சரிவர அமையமில்லை. யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார். தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.