நடந்தது என்ன…?
சின்னத்திரை, சினிமா என சமீபத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை அருகே நடந்து வந்த சீரியல் படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கேனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஒப்பனைக் கலைஞர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’அருவி’ சீரியலில் ஒப்பனையாளராக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
போலீஸார் விசாரணை
பிரபல கன்னட சீரியலின் ரீமேக்கான இதில் ஜோவிதாவுக்கு ஜோடியாக கார்த்திக் வாசுவும், அவருக்கு அம்மாவாக நடிகை அம்பிகாவும் நடித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை பூர்வீகமாக கொண்ட ராம பிரபா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்ததால் ராமபிரபா மகனை சித்தி வீட்டில் விட்டுவிட்டு சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு ராம பிரபாவின் உடல் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராம பிரபாவின் இறப்பு தொடர்பாக ஜோவிதா, அம்பிகா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.