தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. அவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவர் விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்குகிறார்.
பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். யார் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் ப்ரியங்கா தனது கணவர் குறித்து பெருமளவில் பேசியதில்லை. அவர் எப்பொழுதுமே தனது அம்மா மற்றும் தம்பி குறித்தே அதிகம் பகிர்வார்.
அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல:
அத்தை என்ற உறவை தாண்டி அவள் மீது நிறைய அன்பு நான் வைத்திருக்கிறேன். நான் இப்போ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
இப்போ எனக்கு அன்பு மட்டும் கொடுத்தால் போதும். அவர்களுக்கு இரண்டு மடங்கு நான் அன்பை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.