நடிகர் விஜய் ஆண்டனி
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா என்று அதிகாலை 3 மணி அளவில் தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் மற்றும் இணைய வட்டாரத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாரா திடீரென இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த விஜய் ஆண்டனி.
சமீபத்தில் பல்வேறு சர்ச்சைக்கினார். குறிப்பாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடந்த குளறுபடிகளுக்கு காரண கர்த்தாவாக இருந்தது விஜய் ஆண்டனி தான் என்று சமீபத்தில் மார்ஸ் தமிழ்நாடு என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றில் தகவல்கள் வெளியாகின.
அதிரவைக்கும் தகவல்
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் லாரா கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் தற்போது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். லாராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இடம் விசாரணை தொடங்கி இருக்கிறது. எதனால் இவர் தற்கொலை செய்து கொண்டார் விஷயங்கள் மருத்துவர் கூறிய பிறகும், பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த பிறகும் தான் தெளிவாக தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
எனவே சிகிச்சை பார்த்து வந்த மருத்துவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர் என்று தெரிகின்றது.