வித்யா பாலன்
“மனசெல்லாம்” படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் வித்யாபாலன். ஆனால் அவருக்கு ஹிந்தி சினிமாவில் பெரும் இடம் கிடைத்தது. தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த வித்யாபாலன், அஜித் ஜோடியாக ‘நேர் கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தொடக்க காலத்தில் இவரது நடிப்பு பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கைப் படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் படுகவர்ச்சியாக நடித்து திரையுலகினரின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார்.
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகைகள் பலரும் நடிக்க அஞ்சினார்கள், தயங்கினார்கள். ஆனால் நடிகை வித்யா பாலன் அதனை நான் நடிக்கிறேன் என்று தைரியமாக ஏற்றுக்கொண்டு நடித்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஒரு நடிகை சம்மதம் தெரிவித்தார். அதற்கு ஒருபுறம் வரவேற்பும் மற்றொருபுறம் விமர்சனங்களும் வந்தன. விமரினங்களுக்கு பதிலடி தந்துள்ளார் வித்யாபாலன். அதில் அவர் “என்னை பிடிக்காதவர்கள் என் படத்தைப் பார்க்காதீர்கள் என்று தெரிவித்தார்.
வெக்கமே இல்லாமல் கூறிய வித்யா பாலன்
மேலும், பிரபல நடிகர் ரன்வீர் சிங் ஆடையின்றி நடத்திய போட்டோ சூட் குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை வித்யா பாலன், முதன் முறையாக ரன்வீர் சிங்-ஐ ஆடையின்றி பார்த்த போது பிரமித்து போய் விட்டேன் ஒரு நிமிஷம் என் முகம் வியர்த்து போய்விட்டது உடனே என்னுடைய கைகளை வைத்து என் முகத்தை துடைத்தேன். அவருடைய துணிச்சலை கண்டு வியந்தேன். ஆனால், ஒரு நடிகர் ஆடையின்றி போஸ் கொடுப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. காலம் காலமாக பல நடிகர்கள் இதனை செய்து வருகின்றனர்.