பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்படுவர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து பாவா செல்லத்துரை தானாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் வர்மா,யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்கள்.
இதற்கிடையில் நடிகர் தினேஷ், அன்னபாரதி, விஜே அர்ச்சனா, பிராவோ, கானா பாலா ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். மேலும் பரபரப்பு போட்டியாளரான பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
கொச்சைப்படுத்திய ஜோவிகா
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாவின் நடவடிக்கை செயல்கள் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது. யாருக்கும் மரியாதை கொடுக்காதது, கத்தி பேசுவது என்று அவர் சில விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் நிக்ஷன் காதல் வலையில் இருக்கின்ற ஐஷு, அவ்வளவு பிரச்சனையாக இருந்தால் நேற்று தினேஷ் தூக்கி காட்டியிருக்கலாம் தானே என்று கூறியிருக்கிறார். அதற்கு ஜோவிகா, அவர் ஆம்பளையா இல்லையா? என்று பேசி கொச்சைப்படுத்திள்ளார்.
இதனை நெட்டிசன்கள் பலர் வயதுக்கு மரியாதை இல்லாமல் ஏற்க தகாத வார்த்தைகளை பேசிய ஜோவிகாவை கமல், பிக்பாஸ் ஏதும் கேட்கமாட்டார்களா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.