கவிஞர் வைரமுத்து
தமிழ் திரையுலகில் கவிஞர், பாடலாசிரியர், நாவல் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டு முன்னணி பிரபலமாக வருபவர் கவிஞர் வைரமுத்து. இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாடமி என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் திரைப்பட இசையமைப்பாளர்கள்,
பாடலாசிரியர்களுக்கு ராயல்டியை பெற்றுத்தரும் IPRS எனும் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கலைஞர்கள் பாவம். அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதவர்கள். உரிமை தெரியாதவர்கள். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர்.
தாய்ப்பாலுக்கும், நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது. தமிழ் திரையுலகமே பெரும் மரியாதை வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் அத்துமீற முயன்றதாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரமுத்து கூறிய விசியம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வைரமுத்து, குடும்ப வாழ்க்கையில் நடிக்கும் பிரச்சனை மற்றும் போதைக்கு அடிமையாக இருக்கும் இளைஞர்கள் குறித்து பேசினார்.
அதில் அவர் கூறுகையில், பெண்களுக்கு இளம் வயதில் ஏற்படக்கூடிய ஆசையை காட்டிலும் 40 வயது 45 வயதுக்கு மேல் தான் ஆசை அதிகமாக இருக்கும். இதை பல்வேறு அறிவியல் பூர்வ ஆய்வுகளை பார்த்திருக்கிறோம். அது போன்று இருக்கும் போது போதைக்கு அடிமையாகி விட்டால் 45 வயதில் மனைவியின் ஆசைகளை திருப்திப்படுத்த முடியாதவனாக மாறிவிடுவீர்கள்.
மேலும் அவர் கூறுகையில், போதை பொருட்கள் ஆண் மகனின் வீரியத்தை பாதிக்க கூடியது. அதனால் தவறான பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.