ஆறு மணி நடிகை
அமைச்சர் ஒருவர் அரவணைப்பில் ஆறு மணி நடிகை கடந்த ஒரு ஆண்டு காலமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். சில திரைப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்திருக்கும் அந்த நடிகை ஒரே ஆண்டில் சொகுசுக்கார் சொகுசு பங்களா என செட்டிலாகி இருக்கிறார்.
ஹீரோயினாக நடித்தால் கூட இந்த அளவுக்கு வசதி கிடைக்காது. எங்கிருந்து இவ்வளவு வசதிகள் என்று பலரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள். தற்பொழுது உடற்பயிற்சி கூடம், அழகு நிலையங்களை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் நடத்தக்கூடிய உடற்பயிற்சி கூடங்கள் அழகு நிலையங்கள் அனைத்துமே அவருடைய சொந்த இடங்களாக இருக்கின்றது.
அந்த இடங்களை வாடைக்கு எடுக்க போனால் அட்வான்சே லட்சங்களில் தான் வாங்குவார்கள். ஆனால், அந்த இடத்தில் சொந்தமாக மூன்று மாடி கொண்ட ஒரு காம்ளக்சையே விலைக்கு வாங்கியுள்ளார் என்றால் வருமானம் தான் என்ன..? அதற்கு வழி தான் என்ன..? என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
அதன் பிறகு தான் விவகாரம் தெரிய வந்திருக்கிறது. அமைச்சர் ஒருவருடன் மணமான நகரத்தில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அமைச்சர் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவருடைய மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்.
சிக்கிய பரிதாபம்
சமீபகாலமாக அரசியல்வாதிகளின் ஊழலை தேடி தேடி அள்ளிப்போட்டுக்கொண்டிருகின்றது மேலிடம்… ஊழல் தடுப்பு அமைப்புகள் பலவும் பல்வேறு அமைச்சர்களை டார்கெட் செய்திருக்கின்றன.
அமைச்சர்கள் மட்டுமில்லாமல் அவர்களுடைய உதவியாளர்கள், உதவியாளர்களின் உறவினர்கள், அமைச்சர்களின் உறவினர்கள், அமைச்சர் வீட்டில் வேலை செய்பவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களால் சுருட்டிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், அந்த லிஸ்டில் சிக்கி இருக்கிறார் ஆறு மணி நடிகை. எனவே கையில் இருக்கும் சொத்தை காப்பாற்றிக் கொள்ள தன்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறாராம்.
கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும் என்பது போல வெளிநாடுகளில் சென்று விட்டால் பிரச்சனை எப்படி தீரும் என்று தப்பு கணக்கு போட்ட நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சும் என முனுமுனுக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.