நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 -ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகை என்று இவரை சொல்லலாம்.
இதையடுத்து விஜய், அஜித், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
திரிஷா கென்யாவை சேர்ந்தவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. அந்த நபர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் திரிஷாவுடன் இருக்கும் அந்த நபரின் பெயர் சிட்னி ஸ்லாடன் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரும் திரிஷாவும் நெருங்கிய நண்பர்களாம்.
மேலும் அவ்வப்போது இவருடன் சேர்த்து வைத்து சில கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தாலும் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.இந்த தகவல் தெரிந்த ரசிகர்கள் கென்யா நபருடன் உறவா என ஷாக்காகி உள்ளனர்.