நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பலமுகம் கொண்டவர். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
15 வயதில் நடிக்க ஆரம்பித்து இவர் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் தமிழகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பின்னர் இலங்கையிலும் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நடித்தார். மேலும் அவரது மிகவும் பிரபலமான படங்களில் சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாடி சொல்லைத் தட்டாதே, மற்றும் கதைநாயகன்.அத்தோடு இவர் நான்கு படங்களையும் தயாரித்துள்ளார்.
எஸ். எஸ். சந்திரன் சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினி கமல் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தினால் அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்.
புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்
அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2010ஆம் ஆண்டு அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருந்தாலும் அவருடைய புகழ் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறுஇருக்கையில் இவரின் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.