பாடகி ராஜலட்சுமி
திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைவார்கள் அந்த வகையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தனர்.
அதன் பிறகு இவர்களுக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன மேலும் பல மேடை கச்சேரியிலும் பாடி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தனர். வெள்ளி திரையில் இவர்கள் பல படங்கள் பாடி உள்ளனர் அந்த வகையில் இவர் பாடிய சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற என்ன மச்சான், புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள சாமி என் சாமி போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகின.
விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நாங்கள் அதிகமாக சம்பாதித்துவிட்டோம் என்று பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் நாங்கள் கொரோன காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். வீடு, கார் என எல்லாமே லோன் போட்டு தான் வாங்கியிருக்கோம். கொரோனா வந்த போது நிகழ்ச்சியே இல்லை. கையில் பணமும் இல்லை. அதை கடந்து இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். கடன் வாங்கி செலவு பண்றோம்.
அதே மாதிரி ஒரு சூழல் வந்துட்டா என்ன பண்றதுனு அவரிடம் கேட்பேன். கட்ட முடியலைனா பேங்க் எடுத்துக்கும். நமக்கு கிராமத்தில் சொந்தமா ஒரு வீடு இருக்கு. அது போதும் என்று அவர் கூறுவார். இந்த தெளிவு இருக்கு, அது போதும் என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.