ஷிவதா நாயர்
நெடுஞ்சாலை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இவரது இயற்பெயர் ஸ்ரீலேகா கே.வி. கடந்த 1986 ம் ஆண்டில் பிறந்த இவருக்கு வயது 37 ஆகிறது. திருச்சியைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே கேரளாவுக்கு புலம்பெயர்ந்தார். இவரது கணவர் பெயர் முரளிகிருஷ்ணன். சிவாதாவின் பெற்றோர்விஜயராசன் – குமாரி. 5ம் வகுப்பு வரை திருச்சியில் படித்த சிவாதா, பின் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலிக்கு குடிபெயர்ந்தது.
வர் 2008 ஆம் ஆண்டு நினைக்காயி எனும் திரைப்படம் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே சிறப்பான நடிப்பினை நடித்து மக்கள் முன்பு பேராதரவை பெற்றார். இதனை அடுத்து மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. பெரிய திரையில் இவருக்கு அதிர்ஷ்டம் சரியாக வேலை செய்யாததின் காரணத்தால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிந்தார்.
சூடேற்றும் நெடுஞ்சாலை ஷிவதா நாயர்
தமிழ் சினிமாவில், மேக்கப் இல்லாத நேரத்தில் மிக சுமாரான அழகில் இருக்கும் நடிகைகள் கூட முன்வரிசை நாயகியாக வலம் வரும் நிலையில், இயல்பிலேயே வசீகரிக்கும் அழகும், தோற்றமும் கொண்ட சிவாதா பெரிய அளவில் பேசப்படாதது, அவருக்கும் பலத்த ஏமாற்றத்தையே தந்திருக்கும். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வீடியோக்களை அப்டேட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.