நடிகை ஸ்ரித்திகா
கடந்த 1986 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தவர் நடிகை ஸ்ரித்திகா. தமிழில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பான கலசம் என்ற செய்திகளில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர் மத்தியில் முன்னணி நடிகையாக அறியப்பட்டார்.
அதன் பிறகு மாமியார் தேவை, உறவுகள், சங்கமம், வைதேகி, உயிர்மெய், குலதெய்வம், கல்யாண பரிசு 2 அழகு உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார். இவர் தொகுப்பாளினியாகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய காதலன் சநீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தங்களுடைய காதல் அனுபவங்கள் பலவற்றை நேர்காணல் ஒன்றில் பதிவு செய்து தன்னுடைய முகத்தில் புன்னகையை ததும்ப விட்டிருந்தார். இவருடைய கணவர் சநீஸ் வேறு யாரும் அல்ல நடிகை ஸ்ரித்திகாவின் அக்கா கணவருடைய நண்பர்தான்.
நடிகை ஸ்ரித்திகா ஒப்பன் டாக்
அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரித்திகாவை பற்றி அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் நடிகர்களிடம் சில விஷயங்களை எழுதச் சொல்லி அந்த விஷயத்தை ஸ்ரித்திகாவிடம் காட்டி.. இதை யார் சொல்லி இருப்பார் என்று ஸ்ரித்திகாவிடம் கேள்வி எழுப்பும் விளையாட்டு ஒன்று நடைபெற்றது.
அதில் நடிகை ஸ்ரித்திகா தனிமையில் இருக்கும் பொழுது புழு, பூச்சிகளை எல்லாம் கொஞ்சிக் கொண்டிருப்பார். அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ரித்திகா.. ஆமாம் உண்மைதான்.. தனிமை இருக்கும் பொழுது புழு பூச்சிகளை கூட நான் கொஞ்சிக்கொண்டு இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.