சரண்யா துராடி
1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக மீடியாத்துறையில் அறிமுகமானார். இதனை அடுத்து சரண்யா துராடி மிகச்சிறந்த மாடல் அழகியாக தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்த இவருக்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது.
இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொலைக்காட்சி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை எடுத்திருந்தார். இதன் மூலம் பிரபலமான நபராக மாறிய இவர் பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்று விருப்பத்தோடு அதற்காக காத்திருந்தார். இவரது எண்ணத்திற்கு ஏற்ப இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற படங்களில் நடித்து தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அமையாததின் காரணமாக மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
இதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து என்ற சீரியலில் இவர் இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.
புகைப்படங்கள்
தற்போது சீரியல் சினிமா என எதிலும் நடிக்கவில்லை என்றாலும் கூட தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்பொழுது தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.