ரேஷ்மா பசுபுலேட்டி
தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும், செய்தி நிருபராகவும் ஆரம்ப காலகட்டத்தில் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர் தற்போது சின்ன திரையில் தனது அற்புதமான நடிப்பை காட்டி சீரியல்களில் கலக்கி வருகிறார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து மிகப் பிரபலமாக மாறி இருக்கும் இவர் இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று கூறலாம். அந்த அளவு பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களையும், ஆண் ரசிகர்களையும் இவர் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகியுள்ள சீதாராமன் என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இன்ஸ்டாகிராமில் எப்போது இவர் புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
இவ்வாறு இருக்கையில் இவர் சமீபத்தில் கலந்துகொண்ட யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பல தகவல்களை கூறி உள்ளார். அங்கு அவரிடம் நீங்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துள்ளீர்களா என கேட்டபோது இல்லை அப்படி செய்திருந்தால் நான்
ஏன் இப்படி இருக்கப்போகிறேன் எனது கேரியர் எங்கோ சென்றிருக்கும் என கூறியதோடு சீரியலில் நடிப்பதற்காக நாள் ஒன்றித்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறி உள்ளார்.