ரேஷ்மா பசுபுலேட்டி
தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும், செய்தி நிருபராகவும் ஆரம்ப காலகட்டத்தில் பணிகளையும் மேற்கொண்டு வந்த இவர் தற்போது சின்ன திரையில் தனது அற்புதமான நடிப்பை காட்டி சீரியல்களில் கலக்கி வருகிறார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து மிகப் பிரபலமாக மாறி இருக்கும் இவர் இல்லத்தரசிகளின் வீடுகளில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று கூறலாம். அந்த அளவு பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களையும், ஆண் ரசிகர்களையும் இவர் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் ஜீ தமிழில் புதிதாக ஆரம்பமாகியுள்ள சீதாராமன் என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் வில்லியாக கலக்கி வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் இன்ஸ்டாகிராமில் எப்போது இவர் புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருப்பார்கள்.
ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ரசிகர்கள் முன்பு இவரை பேட்டி எடுத்தனர். அதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொன்றிற்கும் வெளிப்படையாகவும் எந்த விதமான ஒளிவு மறைவது பதில் அளித்து வந்தார்.
அப்போது, உங்கள் உதடுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என கூறியுள்ளீர்கள். அதுபோல உங்கள் வேறு உடல் பாகங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
என்னுடைய உடலில் இருப்பது அனைத்தும் கொழுப்பு தான். இதனை உடற்பயிற்சி செய்து குறைப்பது என்பது அவ்வளவு ஈஸியான வேலை கிடையாது. இது பெண்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும் என கூறியிருக்கிறார்.