நீலிமா ராணி ஓப்பன்
தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.
இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23 என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நீலிமா சன் டிவி, விஜய் டிவி என பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அவர் தொடர்களில் ஹீரோயினாக மட்டுமின்றி,வில்லியாகவும் நடித்து மிரள வைத்துள்ளார்.
ஓப்பனாக பேசிய நீலிமா ராணி
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் பல்வேறு விஷயங்களை பேசிய இவரிடம் சமீப காலமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றாக சேர்ந்து வாழ்வது கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதற்காக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. இன்னும் சிலர் எங்களுக்கு குடும்ப அட்டை கிடைப்பதில்லை என்கிறார்கள். எங்களுக்கு சமூகத்தில் முறையான அங்கீகாரம் இல்லை என குமுறுவதையும் பார்க்க முடிகிறது. இப்படியான விஷயங்களுக்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அவர்களுக்கு உண்டான உரிமையை அவர்களுக்குண்டான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை ஆகிறது. ஆனால் இந்த அங்கீகாரத்திற்கு சில காலம் ஆகும். இதற்கான அவகாசம் அதிகமாக தேவைப்படும். இதில் நிறைய சிக்கல்களும் இருக்கிறது. அந்த சிக்கல்களுக்கு எல்லாம் என்ன தீர்வு..? என்று நாம் தான் கண்டறிய வேண்டும்.
சமூகத்தில் கண்டிப்பாக இது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.. கண்டிப்பாக ஓரினச்சேர்கையாளர்களையும் ஒரு நாள் சமூகம் கொண்டாடும் என பேசி இருக்கிறார் நடிகை நீலிமா ராணி.