சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்
வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்திருப்பேன்
சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக அழைக்கும் நபர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை நட்சத்திரா பட வாய்ப்புக்காக உங்களை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்களா..? என்றால், ஆம் அழைத்திருக்கிறார்கள்.
ஒரு மெகா சீரியல் நடிப்பதற்கு இரண்டு நாள் அதுவும் தங்கியிருந்து எல்லாம் ஆடிஷன் என்பது நடக்கவே நடக்காத ஒரு விஷயம். ஆனால் இவர்கள் எதற்காக இப்படி கேட்கிறார்கள் என புரிந்து கொண்டேன். ஒருவேளை நான் நடித்தால் தான் என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் நான் இருந்திருந்தால்.
ஒருவேளை பட வாப்புக்காக படுக்கையை பகிர்ந்து இருப்பேன் என அந்த நேரத்தில் யோசித்துள்ளேன். இந்த விஷயங்களை எளிமையாக நான் கடந்து வந்து விட்டேன் என பேசி இருக்கிறார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.