நடிகை தேவிப்பிரியா
நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
இவர் போலீசாக வேண்டும் என்பது தான் கனவாக வைத்திருந்தார். அதற்கு பலனாக பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். வில்லி கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர்.
ஓப்பன் டாக்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் சமீப காலமாக படங்களில் கிளாமரான காட்சிகள் அதிகமாக புகுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தேவிப்பிரியா அந்த காலத்தில் வெளியான படங்கள் எல்லாம் ஒரு ரகம் தற்போது வெளியாக கூடிய படங்கள் எல்லாம் வேறு ரகம்.
இப்போது அப்படியான காட்சிகள் இருந்தால் தான் அது படம் என்ற ஒரு பிம்பத்தை ரசிகர்கள் மனதில் புகுத்தி வைத்திருக்கிறார்கள். தற்பொழுது, திரைப்படங்கள் என்பதை தாண்டி OTT தளங்களில் மட்டும் வெளியாக கூடிய படங்கள் தயாரிக்கப்படுகிறது. அதில் பல்வேறு மோசமான காட்சிகள் புகுத்தப்படுகின்றன.
கதைக்கு தேவை இருக்கிறதோ..? தேவையில்லையோ..? இப்படியான மோசமான காட்சிகளை வைத்தால் தான் அதிகப்படியான ரசிகர்களை கவர முடியும் என்ற ஒரு பார்முலாவை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ஒரு முறை முதலிரவு காட்சி நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய பொழுது நான் நடிக்க மறுத்தேன். உடனே இயக்குனர், நீங்க முதலிரவு அறைக்குள் செல்கிறீர்கள், பால் சொம்பை கையில்கொடுக்கிறீர்கள்.. அவர் உங்களை தொட்டு தூக்குவார், அவர் மீது சாய்ந்துகொள்ளுங்கள்.. உடனே விளக்கை அனைத்து விடுவார்கள் என்று கூறினார்.