சீரியல் நடிகை தேவி கிருபா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தேவி கிருபா. அவர் தற்போது தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் ஸ்வாதி கிரிஜா சமீபத்தில் மதுரவாயல் காவல் நிலையத்தில் மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில், என் மகள் தேவி கிருபா இறந்துவிட்டதாக நான் நினைத்துக்கொள்கிறேன். எனக்கு இனிமேல் ஒரு மகன் மட்டுமே உள்ளான் என தெரிவித்திருந்தார். 2003-ல இருந்து என் பொண்னு முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டிருக்கிறேன். இரவு, பகல்னு பார்க்காம அவளுக்காக வேலை பார்த்திருக்கேன்.
ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும் அவகூட இருப்பேன். என் மகன் கோகுல் அவளுக்காக கிட்டத்தட்ட 14 வருடம் மகன் மாதிரி அவளுக்காக கார் ஓட்டியிருக்கான். எனக்கு 65 வயசுக்குமேல ஆகுது. இந்த வயசுல என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க. இப்போ நான் ஐயப்பன்தாங்கலில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கேன்.
என் மகன்தான் எனக்கான செலவைப் பார்த்துக்கிறான். என் கையிலிருந்து ஒரு பைசா தரமாட்டேன். இனி என் வாழ்க்கையை நான் பார்க்கப்போறேன். உங்க மகன்தான் உங்களைப் பார்க்கணும்; அவரே பார்த்துப்பார்’னு சொல்லி அனுப்பிட்டாங்க. மேலும் அதனால் நான் தர்கா, கோவில் மற்றும் தெருக்களில் வாழ்ந்து வந்தேன்.
கோடிகளில் புரளும் மகள்
தற்போது நான் ஒரு ஆசிரமத்தில் வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது செலவை என்னுடைய மகன் கோகுல் மட்டும் தான் பார்த்துகிறான் என குற்றசாட்டு வைத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தேவி கிருபா கூறுகையில், நான் நடித்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை என் அம்மா பொறுப்பில்லாமல் இஷ்டப்படி தேவையில்லாமல் செலவு செய்துள்ளார்.
நானும் அதனை எவ்வளவோ பொறுத்துக்கொண்டேன். பின்னர் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரது செலவுகள் குறித்து கணக்கு கேட்டேன். அதற்காக அவர் சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் எனக் கூறியுள்ளார்.