ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
வெளிப்படை
இந்நிலையில் இது குறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
இப்படி நடந்து கொள்ளுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதே சமயம் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு.. நான் சின்னதாக ஆடை அணிவது என்னுடைய விருப்பம்.
அதை அணிந்து கொண்டு நான் வெளியேறு செல்லும் பொழுது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால்.. நான் அவனுடைய கழுத்தை பிடிப்பேன்.. அதுதான் பெண் சுதந்திரம். ஆடை இல்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.