ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர். சின்னத்திரை நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்த ரேகா நாயர் பல ஆண்டுகளாக முயற்சித்தும் அந்த ஆசை நிறைவேறாததால் சைடு ரோலில் நடித்து வந்தார். முதல் படத்திலேயே நிர்வாணமாக நடித்து பலருக்கு அதிர்ச்சியளித்திருந்தார்.
சர்ச்சையை கிளப்பும் ரேகா நாயர்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதில் அவர் அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ. நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன். ஆண்கள் கைவச்சுட்டு போகட்டும் என்கிற மனநிலை இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களிடம் இல்லையே? என்று ரேகா நாயர் கூறியுள்ளார்.