நடிகை ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு நடிகைகளின் ஒருவராக வாஸ்மிகா மந்தனா திறந்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி கர்நாடகாவில் உள்ள விராஜ் பேட் ஊரில் பிறந்த ஒரு நடிகை ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு நடிகை. பிறகு திரைப்படத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக கனடாவில் க்ரிக் பார்ட்டி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே வரவேற்பு பெற்றார்.
கன்னடத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார் என்றாலும் கூட அந்த படத்தின் மூலம் பல சர்ச்சைகளையும் சிக்கினார். காரணம், அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன தற்போதும் இந்த சர்ச்சைகள் இவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ரகசிய திருமணம் செய்து கொண்ட விஜய்யின் வாரிசு பட நடிகை ராஷ்மிகா
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். கேட்டதும் ஷாக் ஆகிடாதீங்க, அவர் கார்ட்டூன் கேரக்டர் நருட்டோவை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த பலர் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்தும் கிண்டலடித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.