நடிகை ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி என்ற கதாபாத்திரம் இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. ரம்யா கிருஷ்ணன் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்மையில் பாகுபலி படத்தில் அவர் நடித்த ராஜமாதா கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. இவர் 2003ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார்.
கூச்சமின்றி கூறிய ரம்யா கிருஷ்ணன்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஷூட்டிங்கில் தான் அனுபவித்த கஷ்டத்தை பற்றி கூறியிருக்கிறார். நடிகைகளுக்கு அவுட்டோர் ஷூட்டிங் சமயத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பது கழிவறை தான்.
அப்படி ஒரு முறை ஒரு படத்தின் ஷூட்டிங் காட்டில் நடந்தது. அப்போது அங்கு கழிவறை வசதியோ கேரவன் கூட இல்லை. பயங்கர வெப்பம் என்பதால் எனக்கும் கலா மாஸ்டருக்கும் ஹீட்டால் லூஸ் மோஷன் ஆகிவிட்டது.
முறையான கழிவறை வசதி கூட அங்கு இல்லாததால், அதற்காக காட்டுக்குள் தேடி அலையாத இடமே கிடையாது. எப்போது ஷூட் முடியும் என்று காத்திருந்தோம். மேலும் பேட்டியில் லூஸ் மோஷன் என்ற வார்த்தையை கட் செய்துவிடுங்கள் என்று கூறியும் அதை அந்த பேட்டியில் ஒளிப்பரப்பும் செய்திருக்கிறார்கள்.