ஷோபனா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஷோபனா . இவர் எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டு மாப்பிள்ளை, தளபதி ,என்கிட்ட மோதாதே ,பாட்டுக்கு ஒரு தலைவன் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இதனை தொடர்ந்து அவர் 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஷோபனா அவர்கள் சிம்பு நடிப்பில் 2012 ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற திரைப் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனையடுத்து அவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அவர் சென்னையில் பரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் அதுமட்டுமில்லாமல் அடிக்கடி பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
53 வயதாகியும் திருமணம் செய்யாத ரஜினி பட நடிகை
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் திருமணம் செய்யாததற்கு காதல் தான் என்று பயல்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆண் நண்பருடன் சுற்றித்திருந்த ஷோபனா அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். அதனால் தான் இன்று வரை அவர் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என்று கூறியுள்ளார் பயில்வான். தற்போது அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.