ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ரச்சிதா “ஆண்களை பொறுத்தவரை ஒரு இடத்துக்கு கிளம்புவது என்றால் ஐந்து நிமிடங்களில் கிளம்பி விடுவார்கள்.
ஆனால் பெண்கள் கிளம்புவதற்கு 30 நிமிடங்கள் ஆகும். பொதுவாகவே எல்லா ஆண்களுமே சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் தங்கள் உடைகளுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால்தான் தாமதமாகிறது” என கூறியிருந்தார் ரச்சிதா.