ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
ஓப்பன் டாக்
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் இரவு நேரத்தில் இதை செய்யாமல் தூங்கவே மாட்டேன் என்று கேட்டால் எந்த விஷயத்தை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு ரச்சிதா மாகலட்சுமி ஒரு பெரிய பவுள் ஒன்றை எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் நிறைய ஐஸ் கட்டிகளை போட்டு அதில் என்னுடைய முகத்தை முக்கி எடுப்பேன்.
ஒரு பத்து நிமிடம் அதனை திரும்ப திரும்ப செய்வேன். அப்படி செய்தால் முகம் அழகாகவும் சருமம் பொலிவுடன் இருக்கும் எனவே பேசி இருக்கிறார்.